பரம்பரியமும் கண்ணியமும் கொண்ட கட்சியாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி இந்திய சுதந்திர போரட்டத்தின் நடுவே உதித்த மக்கள் பேரியக்கமாகும்.
கடந்த காலங்களில் முஸ்லீம்.லீக் செய்த சாதனைகள் ஏராளம்.
கண்ணியமிக்க காயிதே மில்லத் முதல் தற்போதைய தேசியத்தலைவர் காதர் முகைதீன் வரை நல்லதொரு அரசியல் காய் நகர்த்தலை தந்திரத்துடன் செய்து வருகின்றனர்.
ஆனால் இஸ்லாமிய மக்கள் அதிகம் உள்ள ஊர்களில் ஒன்றான அதிராம்பட்டினத்தின் முஸ்லீம் லீக்கின் கிளை மிகவும் கவலையளிக்க கூடியதாக உள்ளது என மூத்த உறுப்பினர் ஒருவர் ஆதங்கபட்டுக்கொண்டார்.
நாங்கள் செயல்பாட்டில் இருந்த காலத்தில் நவீனங்கள் ஏதுமின்றி வீடுவீடாக எடுத்து சென்று கட்சியின் கொள்கை ஏட்டை வினியோப்பது எங்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஆனால் இன்று அதிரையில் ஒரு செயல்பாட்டு அலுவலகம், சகல வசதியுடன் இருக்கும் நிலையில் கட்சியின் செயல்பாடு சொல்லும்படி இல்லை என ஆதங்கப்பட்டார்.
அவர் கூருவதிலும் உண்மைதன்மை இருப்பதாகவே நம்மால் கணிக்க முடிகிறது.
எனவே அதிரை முஸ்லீம்லீக் நிர்வாகிகள் அதிரை கிளையை உயிர்பிக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்!