மனோர பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் பொன்னாண்டு விழா நடைபெற்றது.
பட்டுக்கோட்டை அருகேயுள்ள கோட்டாகுடி பகுதியில் அமைந்திருக்கும் மனோர பாலிடெக்னிக் கல்லூரியில் “நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் விழாவானது நேற்று(14/10/2018) நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கு கல்வி சார்ந்தும் அவர்களது வாழ்க்கையை சார்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.
இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக
பட்டுக்கோட்டை திரு.K. C அசோக் (வக்கீல்)
பட்டுக்கோட்டை திரு.சந்திரமோகன் (வக்கீல்)
பட்டுக்கோட்டை திரு.செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரி சார்பாக பொன்னாடை போற்றி கவுரவித்தனர்.
இந்நிகழ்ச்சியானது தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.