Saturday, April 27, 2024

பட்டுக்கோட்டை-திருவாரூர் அகல ரயில் பாதை பணி ~ தெற்கு ரயில்வே உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு !

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர்-காரைக்குடி இடையிலான ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றுவதற்கு நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் காரைக்குடி-பட்டுக்கோட்டை வரையிலான பணிகள் முடிக்கப்பட்டு, கடந்த ஆண்டு முதல் பயணிகள் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. எஞ்சிய பணியான பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையிலான அகல ரயில் பாதை பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் பட்டுக்கோட்டை-திருவாரூர் இடையிலான வழித்தடத்தில் இன்று சனிக்கிழமை(09.03.2019) காலை என்ஜினை இயக்கி சோதனை நடத்தப்பட்டது.

தெற்கு ரயில்வேவின் கூடுதல் பொது மேலாளர் ஏ.கே. மிஸ்ரா, திருச்சி கொட்ட ரயில்வே மேலாளர் ஏ. உதயகுமார்ரெட்டி, முதன்மை பொறியாளர் இளம்பூர்ணம், துணை முதன்மை பொறியாளர் ஜே. சாம்சன் விஜயகுமார் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ரயில் இன்ஜின் மூலமாக ஆய்வுப்பணிகளை மேற்கொண்டனர்.

முன்னதாக ரயில்வே உயர் அதிகாரிகளை பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நலச்சங்கத்தின் தலைவர் என். ஜெயராமன், செயலாளர் வ. விவேகானந்தம், துணை தலைவர் கா. லெட்சுமிகாந்தன், பொருளாளர் பி. சுந்தரராஜூலு, உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சால்வைகள் அணிவித்து வரவேற்றனர். இந்த ஆய்வு பட்டுக்கோட்டையில் தொடங்கி திருவாரூரில் நிறைவுபெறுகிறது. விரைவில் இவ்வழித்தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...