இந்திய குடியரசின் 71 ஆம் ஆண்டு விழா நாடெங்கிலும் வருகிற 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
நாடெங்கிலும் CAA,NRC,NPR ஆகிய சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில்.
இந்திய குடியரசுக்கு சொந்தமானவர்கள் நாம் தான் என பறைசாற்றும் விதமாக அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத்தினர் கூட்டமைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் வருகிற 26ஆம் தேதி அன்று குடியரசு தின நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக பேரணியாக பேருந்து நிலையம் வரை சென்று கொடியேற்று நிகழ்ச்சி நடத்துவது என்றும் அச்சமயத்தில் அரசியலமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது ஆகவே இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் அனைத்து ஜமாத்,மற்றும் சகோதர சமய மக்கள் கலந்துகொண்டு குடியரசை போற்றுவோம்.