குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், NPR மற்றும் NRC சட்டங்களை அமல்படுத்தக்கூடாது எனவும், அதனை தமிழகத்தில் அமல்படுத்தமாட்டோம் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக்கோரியும் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று முதல் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்று வருகிறது.
இத்தொடர் முழக்க போராட்டம் அதிரை ஜாவியா ரோட்டில் இன்று 2வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை சேர்ந்த பிரமுகர்கள் போராட்ட களத்திற்கு வந்து தங்களின் ஆதரவை தெரிவித்து வருவதோடு, கண்டன உரையும் ஆற்றி வருகின்றனர்.
மேலும் போராட்டத்தில் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக மக்கள் கோஷங்களையும் எழுப்பி வருகின்றனர்.