குடியுரிமை சட்டங்களுக்கு எதிராக அதிரையில் நடைபெற்று வரும் ஷாஹீன் பாக் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள், பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய(03/03/2020) அரங்கில்,
நாம் தமிழர் கட்சியின் பேச்சாளர் இடும்பாவனம் கார்த்திக், திருமதி சபரிமாலா, ஊடகவியலாளர் ரியாஸ் அஹமது, இஸ்லாமிய அழைப்பாளர் நஜ்முதீன், திரைப்பட இயக்குனர் மு. களஞ்சியம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரை ஆற்றுகின்றனர்.