Saturday, April 27, 2024

CAA-NRC-NPR சட்டங்களை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற மாட்டோம் – தமிழக அரசு அறிவிப்பு !

Share post:

Date:

- Advertisement -

தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று காலை துவங்கியதும் திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின், NPR கணக்கெடுப்பு தமிழகத்தில் நடத்த மாட்டோம் என சட்டமன்றத்தில் தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், மத்திய அரசு கொண்டு வந்து உள்ள சட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் போட முடியாது. அது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தமிழக அரசு NPR ,NRC குறித்து தீர்மானம் நிறைவேற்றாது. மக்களை ஏமாற்றும் விதத்தில் தீர்மானம் நிறைவேற்றி பொய்யான வாக்குறுதிகளை கொடுக்க முடியாது. NPR கணக்கெடுப்பு ஏப்ரலில் துவங்கும். மத்திய அரசை கண்டித்து தீர்மானம் போட வேண்டிய அவசியமில்லை என தெரிவித்தார்.

இதை கண்டித்து திமுக, காங்கிரஸ், முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர். மனிதநேய ஜனநாயக கட்சியின் நாகை சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி, NPR க்கு எதிராக அரசு தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்து பேரவை வளாகத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டார்.

கேரளா, புதுச்சேரி, ராஜஸ்தான், பஞ்சாபி என 7 மாநில அரசுகள் மத்திய அரசை எதிர்த்து தீர்மானம் போட்டு உள்ள போது தமிழக அரசு மக்களை ஏமாற்றும் நோக்கில் செயல் பட்டு வருகிறது. இதற்கான விளைவை விரைவில் அதிமுக அரசு சந்திக்கும் என போராடும் மக்கள் கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...