தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் கீழே விழும் நிலையில் மின்கம்பங்களும்,மிகவும் தாழ்ந்த நிலையில் மின்கம்பிகளும் தொங்குவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
பல மாதங்களாகவே இந்த மின்கம்பிகளும்,மின்கம்பங்களும் கீழே விழும் சூழலில் இருக்கிறது, அதுவும் மின்கம்பியானது கையில் பிடிக்கும் அளவிற்கு மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிறது,இதனால் குழந்தைகள் எதிர்பாராதவிதமாக தொட்டுவிடும் சூழல் இருக்கிறது,கவனக்குறைவால் பல்வேறு அசம்பாவித சூழல் ஏற்படும் நிலை இருப்பதாகவும் இதனை உடனடியாக மின்சார வாரியம் கருத்தில் கொண்டு மின்கம்பம்,மின்கம்பிகளை சீர் செய்து விட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.