கொரோனாவின் தாக்கம் நாடு முழுவதும் உச்சத்தில் இருக்கிறது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருந்தும் தமிழக அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக ஊரக மற்றும் பேரூர் பகுதிகளில் காய்ச்சல் கண்டறியும் முகாம்களும், வீடு வீடாக சென்று மருத்துவ ஆய்வு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இன்று அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரின் வேண்டுகோள்படி இன்று அரசு ஊழியர்களுடன் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் செயல்வீரர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் வேறு ஏதேனும் தொந்தரவுகள் உள்ளதா என ஆய்வு செய்தனர். மேலும் மக்களுக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.