அதிரை நகராட்சி வார்டுகளுக்கு நடைபெற்ற தேர்தலில் களப்பணியாற்றிய செயல்வீரர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி SDPI மாவட்ட பொதுச்செயலாளர் முகமது புகாரி தலைமையில் இன்று காலை நடைபெற்றது.
சிறப்புரையாற்றிய பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மண்டல செயற்குழு உறுப்பினர் Z. முஹம்மது தம்பி, SDPI கட்சி நடந்து முடிந்த தேர்தலின் போக்கை மாற்றியமைத்தது பற்றியும் எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் பற்றியும் விளக்கி கூறினார். பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்டத் தலைவர் ஹாஜா அலாவுதீன், பாஸிஸத்திற்கு எதிரான மக்கள் எழுச்சியின் அவசியம் குறித்தும், தேர்தலின் வெற்றி தோல்விகள் நமது பணிகளை அதிகரிக்கவோ குறைத்து விடவோ செய்யாது என கூறினார்.
இறுதியாக நகரத்தலைவர் அஸ்லம் நன்றியுரையாற்றினார்.
SDPI போட்டியிட்ட 14 வார்டுகளிலும் களப்பணியாற்றிய செயல்வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.