அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நாற்று நடவும் பணி முடிவடைந்து விட்டது.
கடந்த இரண்டாண்டுகளாக டெல்டா மாவட்டமான தஞ்சையில் போதிய மழை பெய்யவில்லை.இதன்காரணமாக விவசாய பூமிகள் வறண்டு வெறிச்சோடி காணப்பட்டன.இதனால் விவசாயிகள் மாற்றுவேலைகளை தேடி கொத்தனார்,கூலி,போன்ற கட்டிட துறை சார்ந்த வேலைகளை செய்தனர்.
இந்நிலையில் சென்ற மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவழை ஓரளவு பெய்து விவசாயிகளுக்கு நம்பிக்கை அளித்தது.கடந்த சிலநாட்களாக அதிரையிலிருந்து மல்லிப்பட்டினம் இடையே முழுவீச்சாக நாற்று நடும் பணியில் தீவிரவமாக ஈடுபட்டிருத்தனர்.
கடந்த சிலநாட்களாக வானிலை மாறி மாறி காணப்படுவதால் எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என்று இருப்பதால் பார்ப்பதற்கே அழகு நிறைந்தும்,மனதிற்குள் ஒரு இதமான அனுபவத்தை தருகிறது என்று வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.