Tuesday, May 7, 2024

இலங்கையில் பாதியாக குறையும் மின் கட்டணம் !

Share post:

Date:

- Advertisement -

பல்வேறு பொருளாதார சிக்கலில் இருந்த இலங்கை அரசு தற்போது மெல்ல மெல்ல தலைத்தூக்கி வருகிறது. முன்னதாக அத்தியாவசிய பொருட்களின் மீதான வரியை குறைத்து உத்தரவிட்டது இதனால் அரிசி ரவை கோதுமை எண்ணை உள்ளிட்டவற்றின் விலைகள் வெகுவாக குறைந்தன.

அதன் வரிசையில் தற்போது மின்சார கட்டணத்தை 14.2 வீதம் குறைஒத்திருக்கிறது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு

புதிய கட்டண திருத்தத்தின்படி, 0 முதல் 30 யூனிட்கள் வரையிலான மாதாந்திர நுகர்வு கொண்ட பிரிவினருக்கு யூனிட்டிற்கு 30 ரூபாய் என வசூலிக்கப்பட்ட  கட்டணம் தற்போது 10 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பிரிவிற்கு வசூலிக்கப்படும் நிலையான கட்டணமும் 400 ரூபாயில் இருந்து 150 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

60 யூனிட்டுகளுக்கு குறைவான யூனிட்டுகளுக்கு கட்டணம் 42 ரூபாயிலிருந்து 32 ரூபாவாகவும்,  650 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர கட்டணம் 300 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

91 முதல் 120 யூனிட்களுக்கு இடைப்பட்ட பிரிவுக்கு யூனிட் கட்டணம், 42 ரூபாயில் இருந்து 35 ரூபாய் ஆகவும், மாதாந்திர நிலையான கட்டணம் 1500 ரூபாயில் இருந்து 1000 ரூபாய் ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கை மக்கள்.மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.

இலங்கை செய்தியாளர் – அபூசயீத் . சிலாவத்துறை.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிரையில் தமுமுக சார்பில் நீர் மோர் வழங்கல் – 800க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்!

கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழகம்...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு...

மரண அறிவிப்பு : ரஹ்மத்துனிஷா அவர்கள்..!!

மேலத்தெரு KSM குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம் KSM புஹாரி அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு : A. அகமது நியாஸ் அவர்கள்!

மரண அறிவிப்பு : தண்டயார் குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹும் ஹபிப் முகமது,...