அதிராம்பட்டினம் நகரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதனால் குற்ற வழக்குகளுக்கும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக வங்கிகளுக்கு பொதுமக்கள் , பயமின்றி இலகுவாக சென்றுவர வேண்டும், தேவையற்ற பயத்தால் மக்கள் பாதிப்படைந்து விடக்கூடாது, வியாபாரிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்,சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த வேண்டும், என்பன உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு முதற்கட்டமாக அதிராம்பட்டினம் சேது ரோட்டின் முக்கிய சந்திப்புகள் வங்கிகள் கடை வீதிகள் தொடங்கி, மெயின் ரோடு பழஞ்செட்டி தெரு சந்திப்பு, சேர்மன் வாடி, வரையில் கண்காணிப்பு வட்டத்திற்குள் கொண்டு வந்திருக்கின்றனர்.
இரண்டாம் கட்ட பணிகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருவதாகவும், விரைவில் அதற்க்கான பணிகள் துவங்கும் என கூறப்படுகிறது.
முன்னதாக காவல் நிலையத்தில் தானியங்கி பதிவு இயந்திரம் மற்றும்,பெரிய காட்சி திரை இவைகளை பட்டுக்கோட்டை சரக காவல் துணை கண்கானிப்பாளர் பிரித்திவிராஜ் சவ்கான் பார்வையிடார்.
டாம்டெக் நிறுவனத்தால் இந்த காமிராககள்மே பொறுத்தும் பணொயை ஒப்பந்த அடிப்படையில் செய்து வருவதாகவும், அதிரை நகரில் பொருத்தப்பட்ட காமிராக்கள் துல்லியமாக படம்பிடிக்கும் வகையில் நிறுவப்பட்டுள்ளது என டாம்டெக் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.மேலும் இரவு நேரங்களில் கூட துள்ளியமாக படம் பிடிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கிறது என டாமெக் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
நீண்ட தொலைவிலிருந்து காட்சிகள் செல்லும்போது சிதைவுகள் ஏற்படாவன்னம் கண்ணாடி இளை இணைப்புகள் கொடுக்கப்பட்டு உள்ளது என்றும், இத்னால் படத்தின் துல்லியம் மாறாமல் சென்றடையும் என்றார்.