Sunday, April 28, 2024

பட்டுக்கோட்டையில் CBD அமைப்பின் இரத்த தான கொடையாளர் சேர்க்கை முகாம்..!

Share post:

Date:

- Advertisement -

தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் விபத்தில் சிக்கியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு வரக்கூடிய பல்வேறு அவசரமான இரத்த தேவைகளை அரசுடன் இணைந்து இரத்த தான தன்னார்வ அமைப்புகள் பூர்த்தி செய்து நோயாளிகள் பூரண குணமடைய எந்த வித பிரதிபலன்களையும் பாராமல் உதவி வருகின்றனர்

தற்போதைய சூழ்நிலையில் தஞ்சாவூர் பகுதியில் அதிக அளவில் இரத்த தேவைகள் வந்தவண்ணம் இருப்பதை கருத்தில்கொண்டு தஞ்சாவூர் மாவட்ட கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பு தொடர் இரத்த கொடையாளர் சேர்க்கை விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருகின்றனர்.

பட்டுக்கோட்டை மணிக்கூண்டு பள்ளிவாசல் வளாகத்தில் இன்று16.02.2024 காலை 12மணி முதல் தஞ்சாவூர் மாவட்ட கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பினர்  இரத்த கொடையாளர் சேர்க்கை முகாமை நடத்தினர்.

இம்முகாமில் இரத்த தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு சுமார் 100 இரத்த கொடையாளர்களின் விபரங்கள் அவர்களின் முழு விருப்பத்துடன் பெறப்பட்டது.

இந்த முகாமை கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அதிராம்பட்டினம் நகர தலைவர் அப்துல் மாலிக்  தலைமை தாங்கி துவக்கிவைத்தார்.

இம்முகாமில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் அமைப்பின் மாவட்ட ஆலோசகர் வ.விவேகானந்தம், அதிராம்பட்டினம் நகர துணைதலைவர் நூர் முஹம்மது மற்றும் மாவட்ட குருதி கோடை ஒருங்கிணைப்பாளர்  பாய்ஸ் அகமது மற்றும் உறுப்பினர் ஏ.முஹம்மது இப்ராஹிம் ஆகியோர் கலந்துகொண்டு இரத்த தானத்தின் அவசியம், யார் யார் இரத்த தானம் செய்யலாம் என்பது போன்ற பல விபரங்களை எடுத்து கூறி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

ஒன்றரை மாதத்திற்கு பிறகு உரிய நபரை தேடி ஒப்படைக்கபட்ட தொகை., ஐமுமுகவினற்கு குவியும் பாராட்டு..!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காட்டுபள்ளிவாசல் தர்காவில் கடந்த மாதம் ஒரு வயதான...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல்...

மரண அறிவிப்பு : மீ.க. ஜெய்துன் அம்மாள் அவர்கள்..!!

நெசவு தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.க. காதர் முகைதீன் அவர்களின் மகளும்,...

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...