நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தொகுதி பங்கீடுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகத்துடன் சட்டமன்ற தேர்தலில் இருந்து மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி அமைத்து இரண்டு தொகுதியில் வெற்றி பெற்றது. தற்போது நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் மமகவிற்கு குறைந்தது ஒரு தொகுதியாவது வழங்கப்படும் என மமக ஆதரவாளர்கள் முதல் தொண்டர்கள் வரை எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் தொகுதி பங்கீட்டில் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, சிபிஎம், சிபிஐ,மதிமுக, ஐயூஎம்எல், கொமதேக ஆகிய கட்சிகளுக்கு மட்டும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தொகுதிகளை வழங்கிவிட்டு மனிதநேய மக்கள் கட்சிக்கு மனதில் இடம் கொடுத்துள்ளது அக்கட்சியின் ஆதரவாளர்கள் முதல் உறுப்பினர்கள் வரை பலரையும் அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் பதியப்படுவதாவது “இன்னும் எத்தனை காலத்திற்கு அவர்கள் பின்னால் கொடியை பிடித்துக்கொண்டு செல்வது” என்று பதிந்து வருகின்றனர்.