இஸ்லாமியர்கள் வருடாவருடம் நோன்பு நோற்பது கடமையாகும்.
இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த 2024 ஆம் வருடம் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதற்கு இஸ்லாமியர்கள் பிறை பார்த்து நோன்பு வைப்பது வழக்கம். அந்த வழக்கத்தின் அடிப்படையில் அதிராம்பட்டினம் புது பள்ளிவாசல், மல்லிப்பட்டினம், புதுபட்டினம் பகுதிகளில் இன்றைய தினம் பிறை பார்க்கப்பட்டது இறைவனின் அருளால் பிறை தென்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் இன்று இரவு முதல் நோன்பு வைக்க துவங்குவார்கள்.