அதிராம்பட்டினம் பைத்துல்மாலின் கிளைகள் பல்வேறு நாடுகளில் வெளிநாடுவாழ் அதிரை சகோதரர்களால் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிரை பைத்துல்மால் குவைத் கிளையின் சார்பில் 19வது நோன்பான நேற்று, குவைத் சிட்டி மாலியாவில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அகமது முகைதீன் பயான் சொற்பொழிவாற்றினார். பைத்துல்மால் குவைத் கிளையின் சேவைகள் குறித்து பாவா பகுருதீன் எடுத்துரைத்தார்.
இறுதியாக கமருன் ஜமான், ரமலான் கிட், ஜகாத் மற்றும் சதக்கத்துள் பித்ர் குறித்து விளக்கி வருகை தந்த அனைவருக்கும் நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தார். இதில் குவைத் வாழ் அதிரையர்கள் பலர் கலந்துகொண்டனர்.