Tuesday, December 2, 2025

மழைநீரோடு கழிவுநீரும் தேங்கி நிற்கும் அவலம்..நடவடிக்கைக்கோரி மனுவளித்த தீனுல் இஸ்லாம் இளைஞர் மன்றத்தினர் !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இம்மழையால் அதிரை கடற்கரைத் தெரு பகுதியில் மழைநீர் அப்படியே தேங்கி நிற்கிறது. அதிரை பேரூராட்சியின் சார்பில் முறையான வடிகால் வசதி செய்யப்படாததே இம்மழைநீர் தேங்கி நிற்பதற்கு காரணம்.

கடற்கரைத்தெருவில் மழைநீரோடு கழிவுநீரும் சேர்ந்து தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் இதுகுறித்து அதிரை பேரூராட்சி செயல் அலுவலரிடம் கடற்கரைத்தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தினர் இன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அப்போது, கடற்கரைத்தெருவில் முறையான வடிகால் வசதி இல்லாததால் மழைநீரோடு கழிவுநீரும் தேங்கி நிற்கிறது. பலமுறை அதிகாரிகளை அணுகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வரும் 7ம் தேதி தமிழகத்திற்கு விடுக்கப்பட்டு இருக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை கருத்தில் கொண்டு பேரூராட்சி நிர்வாகம் முறையான வடிகால் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி!

அதிராம்பட்டினம் ஜமாத்துல் உலமா சபை மற்றும் காதர்முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இணைந்து “போதை அழிவின் பாதை – விழிப்புணர்வே விடிவு” என்ற...

அதிரையில் நடைபெற்ற கிரிக்கெட் தொடரில் ABCC அணி சாம்பியன்!(படங்கள்)

அதிரை பீச் கிரிக்கெட் கிளப்(ABCC) நடத்திய 30 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி கடந்த 16,17 ஆகிய தேதிகளில் கடற்கரைத்தெரு...

அதிரை WFC கால்பந்து தொடர் வெற்றி பெற்ற அணிகள் விபரம்.!!

நடந்து முடிந்த இரண்டாம் நாள் ஆட்டத்தில் இதில் முதலாவது ஆட்டம் ROYAL FC B மற்றும் MADUKUR FC அணியினர் விளையாடினர் இதில்...
spot_imgspot_imgspot_imgspot_img