Tuesday, December 2, 2025

சென்னையில் இருந்து அதிரை வழியாக ராமேஸ்வரத்திற்கு இரு மார்க்கத்திலும் சிறப்பு ரயில் அறிவிப்பு – டிக்கெட் முன்பதிவும் தொடங்கியது!

spot_imgspot_imgspot_imgspot_img

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து அதிரை – பட்டுக்கோட்டை வழியாக ராமேஸ்வரத்திற்கு பண்டிகை கால சிறப்பு ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து திருவாரூர் – காரைக்குடி அகல ரயில் பாதை வழித்தடத்தில் சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, வரும் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரவு 8.45 புறப்படும் ரயில்(வண்டி எண் 06041) எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் போர்ட், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம்(அதிகாலை 4.45 மணி), பட்டுக்கோட்டை (அதிகாலை 5.03 மணி), பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் வழியாக ராமேஸ்வரத்திற்கு திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சென்று சேருகிறது.

மறுமார்க்கத்தில் 24/10/2022 திங்கட்கிழமை ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4.20 மணிக்கு(வண்டி எண் 06042) புறப்பட்டு மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை(இரவு 9.05 மணி), அதிராம்பட்டினம்(இரவு 9.21 மணி), திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர் போர்ட், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 6.20 மணியளவில் தாம்பரம் சென்று சேருகிறது.

இந்த இரண்டு சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று காலை தொடங்கிவிட்டது. ஆகையால் அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்திக்கொள்ளும் பட்சத்தில், வரும் காலங்களில் திருவாரூர் – காரைக்குடி வழித்தடத்தில் பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் விடப்படும் வாய்ப்புகள் உள்ளன.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமிழ்நாடு தலைமை காஜி முஃப்தி. சலாஹூதீன் முஹம்மது அயூப் வஃபாத்தானார்!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜியாக இருந்துவந்த மௌலவி. முஃப்தி. டாக்டர். சலாஹூதீன் முஹம்மது அய்யூப்(வயது 84) இன்று 24/05/2025 சனிக்கிழமை இரவு 9...
spot_imgspot_imgspot_imgspot_img