நடவடிக்கை எடுக்குமா ? சுகாதார துறை
தமிழகத்தை அச்சுறுத்தி வரும் #டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலால் நாள்தோறும் பலர் உயிரிழந்து வருகிறார்கள் என ஊடகங்கள் கூறுகிறது. இதனால் மாநில சுகாதார துறை பம்பரமாக சுழன்று கட்டுப்பாட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
ஆனால் விதி விலக்காக அதிராம்பட்டினம் நகரில் மட்டும் டெங்குக்கு உரம் போட்டு நோயை பரப்ப முயற்ச்சித்து வருவதாக தெரிகிறது. நகராட்சி அந்தஸ்து பெற்ற அதிரையில் ஆதிகாலத்து புகை இயந்திரம் இரண்டு மட்டுமே உள்ளது. காலை வேளைகளில் பெயருக்காக சில இடங்களில் அடிக்கப்படும் புகையால் வீதியில் உறங்கு கொசுக்கள் கூட் வீட்டின் கரைகளில் வந்து ஒளிந்து கொள்கிறது.
இரவு வேலைகளில் அசந்து தூங்க எத்தனிக்கும் ஒவ்வொருவரையும் தனது கூறான ஊசி மூலம் கொல்லாமல் கொன்று வருகிறது.
இதற்கு ப்யந்து ரசாயன ஊதுபத்திகளை நாடும் மக்கள் சுவாச கோளாரால் சிக்குண்டு வருகிறார்கள்.
“அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட எல்லைகளில் முறையாக கொசு ஒழிப்பில் கவனம் செலுத்தவில்லை என்றும், குறிப்பாக கொசு ஒழிப்பிற்கென இதுவரை மருந்துகள் இல்லை என்றும் புகை வழியாக கொசுக்குகளுக்கு ஆண்மை இழப்பு மட்டுமே செய்யப்படும் என கூறப்படுகிறது.”
கொசுக்களை ஒழிக்க வேண்டும் என்றால் அபேட் கெமிக்கல் கலந்த நீரை சாக்கடை மற்றும் தேங்கிய நீர்களில் தெளித்தால் மட்டும் புதிய லாவா கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க இயலும் என நகராட்சி ஊழியர் ஒருவர் தெரிவிக்கிறார்.
கொசு ஒழிப்பில் அக்கரை காட்ட வேண்டும் என கடந்த ஒரு மாதத்திற்கு முன் அஸ்வா என்கிற தன்னார்வ சமூக அமைப்பு நகராட்சி நிர்வாகத்திடம் மனு அளித்திருந்த நிலையில் நிர்வாகம் மெத்தனபோக்காக நடந்து கொள்வதாக அதன் அமைப்பாளர் அப்பாஸ் கூறுகிறார்.