தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சட்டவிரோதமாக சீல் வைக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லீம் கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளிக்கு ஆதரவாக பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் மமக தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லாஹ் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். அப்போது பேசிய அவர், சிறுபான்மை கல்வி நிலையத்திற்கு திமுக நகர செயலாளர் இராம.குணசேகரன் ஏற்படுத்தும் இடையூறுகள் குறித்தும் பேசினார். மேலும் இவரின் சிறுபான்மை மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு கொண்டு செல்வேன் எனவும் கூறினார்.
இந்தநிலையில், அதிரை காவல்நிலையத்திற்கு சென்ற சில திமுகவினர், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-வை கைது செய்ய சொல்லி புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த நகர தமுமுக-மமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அதிரை காவல் நிலையம் சென்று விவரம் கேட்டுள்ளனர். அப்போது நம்மிடம் பேசிய தொண்டர்கள், சமூதாய தலைவரான ஜவாஹிருல்லா-வை கைது செய்தால் தமிழ்நாட்டையே ஸ்தம்பிக்க செய்வோம் என ஆவேசத்துடன் கூறினர்.