மனிதனேய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் தமீமுன் அன்சாரி கடந்த கால அதிமுக ஆட்சியின் போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து அரசியலில் மிகவும் பேசப்பட்ட நபராவார்.
சட்டமன்ற வளாகத்தினுள் அவ்வப்போது ஏதாவது ஒரு மக்கள் பிரச்சனையை எழுப்பி தீர்வும் கண்டிருக்கிறார்.
இந்த நிலையில் எதிர்வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் யாரோடு கூட்டணி என்பதை தெளிவுபடுத்த வில்லை.
இருப்பினும் அதிமுகவின் அழைப்புகள் தொடர்வதாக கூறப்படுகிறது.
அடிமட்ட தொண்டர்களின் கருத்தை கேட்ட பின்பே கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இயலும் என் மஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
இது ஒருபுறம் இருக்க அதிமுக கூட்டணியில் உள்ள தாமக தஞ்சையை குறிவைப்பதாக கூறப்படுகிறது, மாஜகவின் கடைக்கண் பார்வையும் தஞ்சையின் பக்கம் இருப்பதால் கூட்டணிக்குள் குட் நியூஸ் இருக்காது என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.