உத்தரபிரதேசத்தில் உள்ள பழமை வாய்ந்த ஞானவாபி பள்ளி கோவில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதாக கூறி நீதிமன்றம் அவ்விடத்தில் பூஜை செய்ய அனுமதி அளித்துள்ளது.
இதனால்,இஸ்லாமியர்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டு உள்ளது.
நீதிமன்றம் சமீப நாட்களாகவே இஸ்லாமிய விரோத தீர்ப்புகளை வழங்கி வருவது, நீதித்துறைகளில் காவி துறைகள் ஊடுருவி வருவதை அப்பட்டமாக காட்டுகிறது.
இது இந்திய இறையாண்மைக்கு எதிரான இந்த போக்கு தொடர்ந்தால் இந்நாட்டில் வாழ முடியாத சூழல் உருவாகும்.
இதனை தடுக்கும் நோக்கில் அவ்வப்போது ஜனநாயக ரீதியிலான போராட்டங்களை முன்னெடுப்பது அவசியமாகிறது.
இதனை கருத்திற் கொண்டு நாளை மதுரையில் நடைபெறவுள்ள ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ள அதிரையில் இருந்து காலை : 09மணிக்கு தக்வா பள்ளி அருகிலிருந்து வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டு உள்ளதாக ஐமுமுகவினர் தெரிவிக்கின்றனர்.
இதே போல சென்னையில் நடைபெறும் கண்டன ஆர்பாட்டத்தில் செ.ஹைதர் அலி, SM பாக்கர் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்ற உள்ளார்கள்.