உலகக் கல்வியும் மார்க்க கல்வியும்தான் மனிதை உயர்த்தும் ஆயுதம் – திருச்சி அல்ஹுதா கல்லூரி விழாவில் MMS ஜஃபர் பேச்சு !
திருச்சியில் இயங்கும் அல்ஹுதா கல்வி குழுமத்தின் ஆண்டுவிழா நடைப்பெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக திருச்சி விமான நிலைய மேலாளர் அதிரை MMS ஜஃபர் கலந்து கொண்டார்.
முன்னதாக கல்வி குழுமத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. மாணக்கர்களின் சிறப்பு நிகழ்சிக்கு பின்னர் விருந்தினர்களை கவுரவிக்கும் நிகழ்வு நடந்தன.
பின்னர் பேசிய MMS ஜஃபர்,உலகக் கல்வியும் மார்க்க கல்வியும் இரண்டு கண்களை போன்றது என்றும் இதே கல்வி கூடத்தில் பார்வையாளரக கடந்த காலங்களில் கலந்து கொண்ட என்னை சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறது என்றால், இதற்கு காரணம் நான் பெற்ற கல்வியும் என்னை பயிற்றுவித்த ஆசிரியர்களும் ஆவார்கள் என்றார்.
ஆக மனிதனை உயர்த்தும் ஆயுதமாக உள்ள கல்வியை கற்று நாட்டிற்கும்,நாம் சாந்துள்ள சமூகத்திற்கும் பயனுள்ள மாணாக்கர்களாக உருவாக வேண்டும்.என கேட்டு கொண்டார்.